உலக இரத்த கொடையாளர்கள் தினம்
ஜீன் 14 அன்று உலகம் முழுவதும் இரத்த கொடையாளர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்த தினத்தில் இரத்த வகைகளை கண்டுபிடித்த AB0 என்று வகைப்படுத்திய கார்ல் லாண்ட்ஸ்டெய்னை நாம் நினைவு கூற கடமைப்பட்டிருக்கின்றோம் .
இந்தியாவில் ஆண்டுக்கு 5 கோடி யூனிட் இரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் கிடைக்கக்கூடிய இரத்தமோ 2.5 கோடி தான் , நாள் ஒன்றுக்கு 38 ஆயிரம் யூனிட் இரத்தம் தேவைப்படுகிறது ஆனால் அந்த அளவுக்கு இரத்ததானம் செய்வதற்கு இந்தியர்கள் முன்வருவதில்லை என்பது தான் எதார்த்தமான நிலை.
ஒரு முறை ஒரு யூனிட் நீங்கள்
இரத்ததானம் செய்தால் அது ஒரு உயிரை அல்ல மூன்று உயிரை காப்பாற்றுகின்றது அப்படி என்றால் இந்த இரத்ததானத்துடைய முக்கியத்துவத்தை நாம் தெளிவாக உணர முடியும் .
அதுமட்டுமல்ல இந்த இரத்ததானம் செய்பவர்களுக்கு ஏற்படும் நன்மைகளானது உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது, நமக்கு கேலரிகளை குறைப்பதற்கு உதவுகிறது, நல்ல உடல்நிலையுடன் சீராக வாழ்வதற்கு அது உதவி செய்கிறது.
ஆண்டுக்கு நான்கு முறை நாம் இரத்ததானம் செய்யலாம் .
சாதி , மத , இன்ன பிற வேறுபாடுகளையெல்லாம் களைந்து அனைவருக்கும் இரத்ததானத்தை கடந்த காலங்களிலே நம்முடைய குருதி கொடையாளர்கள் அளித்து வந்திருக்கின்றார்கள் அந்த சேவை தொடர வேண்டும் , குருதிதானம் வழங்குவோம், உயிர்களை காப்பாற்றுவோம்,
அமைதியும் அரவணைப்பையும் இந்த மண்ணில் நிலைநாட்டுவோம் - நன்றி.
Comments
Post a Comment